Pragnanandha Takes Runner-Up: இறுதிக்கட்டம் வரை போராடி இரண்டாம் இடத்தை கைப்பற்றினார் பிரக்ஞானந்தா: டை பிரேக்கர் சுற்றில் கார்ல்சன் வெற்றி.!

இரண்டாம் டை பிரேக்கர் சுற்றில் தோற்கடிக்கப்பட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் பிரக்ஞானந்தா.

Pragnanandha (Photo Credit:Twitter)

ஆகஸ்ட் 24, பாக்கூ (Sports News): அஜர்பைஜானில் (Ajerbaijan) நடைபெற்றுக் கொண்டிருக்கும் செஸ் உலகக் கோப்பை தொடர் (World Chess Championship) பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் அபாரமான வெற்றிபெற்று பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியாவையே பெருமைப்பட வைத்தது. அதைத்தொடர்ந்து இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை  எதிர்த்து விளையாடினார்.

முதல் டை பிரேக்கர் சுற்றில் 47 நகர்வுகளை முன்வைத்தும் பிரக்ஞானந்தாவால் ஆட்டத்தை கைப்பற்ற முடியாமல் போனது. 1-0 என்ற வித்தியாசத்தில் கார்ல்சன் வெற்றிபெற்றார். இதனால் இரண்டாவது டை பிரேக்கரில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் பிரக்ஞானந்தா.

இறுதிக்கட்டத்தில் மிச்சம்18 நிமிடங்களே பாக்கி இருந்த நிலையில் பிரக்ஞானந்தாவிற்கு எதிராக விளையாடிய இரண்டாவது டை பிரேக்கர் (Tie breaker) சுற்றை டிராவில் முடித்து கார்ல்சன் இறுதி போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார். கார்ல்சன் 1.5 – பிரக்ஞானந்தா 0.5 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டி நிறைவடைந்தது. கடைசி கட்டம் வரை விடாமுயற்சியுடன் விளையாடிய பிரக்ஞானந்தாவிடம் ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆட்டோகிராப் பெற்றனர்.