Mother Forced Her Daughter Into Prostitution: கடனை செலுத்த தவறியதால், மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்; தாய் உட்பட 6 பேர் கைது..!
சென்னையில் தாய் ஒருவர் தனது 14 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 06, சென்னை (Chennai News): சென்னையைச் சேர்ந்த தாய் ஒருவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவனைப் பிரிந்து தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர், குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மகளின் படிப்பை நிறுத்தியுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு பணம் தேவைப்பட்ட நிலையில், அவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாலியல் புரோக்கரான முத்துலட்சுமி என்பவரிடம் ரூ. 40 ஆயிரம் பணத்தை வட்டிக்கு வாங்கியுள்ளார். வாங்கிய கடனை (Debt) குறிப்பிட்ட தேதிக்குள் திரும்ப கொடுக்க முடியாததால், பணத்திற்கு பதிலாக தனது மகளை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்துள்ளார். Collector Warning Towards Parents: குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியினர் அலுவலகத்திற்கு வந்த பெற்றோர்கள்.. கண்டித்த மாவட்ட ஆட்சியர்..!
இதனையடுத்து முத்துலட்சுமி, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை சிறுமியை பாலியல் தொழிலில் (Prostitution) ஈடுபடுத்தி வந்துள்ளார். இதனால் கடந்த ஆண்டு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக முத்துலட்சுமியின் வீட்டில் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், அவரது தாய் இரக்கம் இல்லாமல் தனது மகளை அழைத்துச் சென்று மீண்டும் முத்துலட்சுமியிடமே ஒப்படைத்துள்ளார். பின் அங்கிருந்து தப்பித்த சிறுமி, தனது உறவினர் ஒருவர் உதவியுடன் கடந்த 8 மாதங்களாக மணலி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமியைத் தொடர்புகொண்டு அவரது தாய் மீண்டும் அவரை முத்துலட்சுமியிடம் செல்லுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் மிகுந்த மனமுடைந்த அச்சிறுமி இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய், பாலியல் புரோக்கர் முத்துலட்சுமி (வயது 32), முத்துலட்சுமியின் கணவர் நிஷாந்த் (வயது 37), மகேஸ்வரன் (வயது 24), கிஷோர் (வயது 22), அஜித் குமார் (வயது 20) ஆகிய 6 பேரையும் போக்சோ (Pocso) பிரிவின் கீழ் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)