Rowdy Killed: வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த முன்னாள் ரௌடியை மனைவி முன்பே கூறுபோட்ட 10 பேர் கும்பல்... சென்னையில் பயங்கரம்.!
கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்பதை போல, கத்தி எடுத்து ரௌடியாக வலம்வந்தவர் மனைவி, குழந்தைகள் அமைந்ததும் ரவுடி செயல்களில் இருந்து விலகி இருந்தாலும், அவன் செய்த கர்மா வினைகள் திரும்பி 10 பேர் கும்பலால் மனைவியின் கண்முன்பே துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மார்ச் 05, ஆவடி (Chennai News): சென்னையில் உள்ள ஆவடி (Avadi, Chennai), பொத்தார் வள்ளி வேலன் நகரில் வசித்து வருபவர் யோகேஸ்வரன் (வயது 32). இவர் முந்தைய காலங்களில் ரௌடியாக வளம்வந்து இருக்கிறார். தற்போது பெயின்டிங் வேலையில் ஈடுபட்டு வருகிறார். யோகேஸ்வரனுக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் யோகேஸ்வரன் வேலை முடிவடைந்த பின்னர் வீட்டில் அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் வந்த 10 பேர் கொண்ட (Rowdy Killed by 10 Man Gang infront of Wife) கும்பல், யோகேஸ்வரனின் வீட்டில் பயங்கர ஆயுதத்தோடு புகுந்துள்ளது. Pathu Thala Teaser: திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பத்து தல திரைப்படத்தின் அல்டிமேட் லெவல் டீசர் வெளியீடு.!
அங்கு உறங்கிக்கொண்டு இருந்த யோகேஸ்வரனை சுத்துப்போட்ட கும்பல், அவரின் கழுத்து, தலை உட்பட உடலின் பல இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்து அங்கிருந்து தப்பி சென்றது. இரத்த வெள்ளத்தில் யோகேஸ்வரனின் உடல் சடலமாக வீட்டில் இருந்தது.
நடந்த நிகழ்வுகளை நேரில் கண்டு யோகேஸ்வரனின் மனைவி அலறினாலும் பலனில்லை. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ஆவடி டேங்க் பேக்டரி (Avadi Tank Factory Police Station) காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், யோகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், 10 பேர் கும்பலுக்கு வலைவீசியுள்ளனர். பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)