Avadi Murder: மனைவிக்கு கள்ளக்காதலனால் பிறந்த குழந்தை; ஆத்திரத்தில் வீடுபுகுந்து நடந்த வெறிச்செயல்..!

கள்ளக்காதல் பழக்கத்தால் ஒன்று சேர்ந்த தம்பதியில், ஆணை பெண்ணின் கணவர் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Crime File Picture (Photo Credit: PIxabay)

ஜூன் 29, ஆவடி (Chennai News): சென்னையில் உள்ள ஆவடி, பொத்துர் செல்வகணபதி நகரில் வசித்து வருபவர் சுரேஷ் குமார் (வயது 29). இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்மணி விஜயலட்சுமி. இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. நெருங்கி பழகி வந்த ஜோடி, ஒருகட்டத்தில் கணவன் - மனைவியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளது. தம்பதிகளுக்கு ஒரு மகளும் பிறந்துள்ளார்.

நேற்று காலை 10 மணியளவில் வேலைக்காக சுரேஷ் புறப்பட்டுக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்குள் கத்தி உட்பட பயங்கர ஆயுதத்துடன் புகுந்த கும்பல், சுரேஷ் குமாரை சுற்றிவளைத்து பயங்கரமாக தாக்கியுள்ளது. கும்பலின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்தும் வழியில்லை.

வீட்டிற்குள்ளேயே சுரேஷ் குமாரை ஓடஓட சரமாரியாக வெட்டி இருக்கின்றனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி தடுக்க முயற்சித்தபோது, அவரின் கையிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. சுரேஷ்குமாரை விஜயலட்சுமி முன் ஆத்திரம் தீர வெட்டி கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. Rishi Sunak Pen Ink: அழியும் மையுள்ள பேனாவில் அரசு கோப்புகளில் கையெழுத்திட்ட இங்கிலாந்து பிரதமர்; சர்ச்சையில் சிக்கியதால் பரபரப்பு.!

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ஆவடி டேங்க் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெட்டுக்காயத்தால் துடித்த விஜயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் காரணமாக சுரேஷ் குமார் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

இவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்து வந்த நிலையில், கணவரை பிரிந்து தனியே வாழ்ந்த விஜயலட்சுமிக்கு சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விஜயலட்சுமியின் கணவர் தனது மகனுடன் தனியே வசித்துவந்த நிலையில், மனைவி மற்றும் சுரேஷின் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து செல்ல சுரேஷ் காரணம் என்று எண்ணிய அவர், சம்பவத்தன்று காலை சுரேஷ் குமாரை வீடுபுகுந்து கொலை செய்துள்ளார். இதனால் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement