Youth Killed by Father & Son: "என் அன்பு மகள் இறப்புக்கு நீதானே காரணம்? அவகூடயே போ" - கோவையில் தந்தை-மகன் பயங்கர செயல்..! இளைஞர் கொலை.!

மகளின் இறப்புக்கு, அவரை காதலித்து ஏமாற்றிய இளைஞர் காரணம் என நினைத்த தந்தை-மகன், பெண்ணின் இறப்புக்கு பழிவாங்க எண்ணி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Youth Killed by Father & Son: "என் அன்பு மகள் இறப்புக்கு நீதானே காரணம்? அவகூடயே போ" - கோவையில் தந்தை-மகன் பயங்கர செயல்..! இளைஞர் கொலை.!
Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

நவம்பர் 26, துடியலூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் வசித்து வரும் தமிழ்ச்செல்வன் (வயது 27) என்பவர், ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் தாய்வழி பூர்வீக கிராமம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், அயன் கொல்லங்கொண்டான் கிராமம் ஆகும்.

காதல் நாடகம்:

இதனால் தனது சொந்த கிராமத்திற்கு அப்போது சென்று வருவது உண்டு. அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த மலைக்கனி என்பவரின் மகள் ஆனந்தியுடன் பழக்கத்தை ஏற்படுத்திய தமிழ்ச் செல்வன், அவரை காதலித்து இருக்கிறார். தமிழ்ச்செல்வன் தன்னை மட்டுமே காதலிப்பதாக எண்ணிய ஆனந்தியும், அவரை உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணையும் தமிழ் காதலித்து இருக்கிறார். Youth Dies by Suicide: பெற்றோரின் பிரிவால் வாடிய மகன்; விஷம் குடித்து விபரீத முடிவு.. திருச்சியில் சோகம்.! 

இளம்பெண் தற்கொலை:

இந்த விஷயம் ஆனந்திக்கு தெரியவந்து, அவர் தன்னை திருமணம் செய்யுமாறு கூறியுள்ளார். திருமண கோரிக்கை நிராகரிப்பு செய்யப்பட்ட காரணத்தால், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக ஆனந்தி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். தனது அன்பு மகளின் மரணத்திற்கு தமிழ்ச்செல்வனே காரணம் என்பதை அறிந்துகொண்ட மலைக்கனி (வயது 47), ஆனந்தியின் சகோதரர் ராஜாராம் (வயது 25), தமிழை தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளனர்.

கதைமுடித்த அப்பா-மகன்:

இவர்களின் திட்டப்படி, இருவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று கோவைக்கு சென்றுள்ளனர். அங்கு தமிழ்ச்செல்வன் பணியாற்றி வந்த மருத்துவமனைக்கு சென்று, அவரை தொடர்பு கொண்டு வெளியே வரவழைத்தவர்கள், காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கொலையை அரங்கேற்றிய தந்தை-மகன் தப்பிச் சென்றனர்.

காவல்துறை விசாரணை:

கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த துடியலூர் காவல்துறையினர், தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தந்தை-மகனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement