Mudhalvar Marundhagam: "முதல்வர்‌ மருந்தகம்‌" அமைக்க விருப்பமா? பி.பார்ம்., டி.பார்ம் சான்று பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு.. விபரம் இதோ.!

"முதல்வர்‌ மருந்தகம்‌" அமைக்க இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Mudhalvar Marunthagam (Photo Credit: mudhalvarmarundhagam.tn.gov.in)

நவம்பர் 05, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாடு முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ கடந்த 15.08.2024 அன்று, சுதந்திர தினவிழா உரையில்‌, "ஜெனரிக்‌ மருந்துகளையும்‌ பிற மருந்துகளையும்‌, குறைந்த விலையில்‌ பொதுமக்களுக்கு கிடைக்கச்‌ செய்யும்‌ வகையில்‌ முதற்கட்டமாக 1000 முதல்வர்‌ மருந்தகங்கள்‌ (Mudhalvar Marunthagam Scheme) துவங்கப்படும்‌ அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை நகரில் தொடங்கப்படும் என அறிவித்தார். பிரதமரின் மக்கள் மருந்தகம் போல, தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் கொள்முதல்:

இத்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக 29.10.2024 அன்று முதலமைச்சர்‌ தலைமையில்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மருந்தகங்கள்‌ அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள்‌, மாவட்ட மருந்து சேமிப்புக்‌ கிடங்குகள்‌ அமைத்தல்‌ உள்ளிட்ட ஏற்பாடுகள்‌ குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்வர்‌ மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக்‌ மருந்துகள்‌ தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு வழங்கப்படும்‌. அதிமுக கிளை செயலாளர் வெட்டிக்கொலை; சிவகங்கையில் பயங்கரம்.. கிராம மக்கள் கொந்தளிப்பு.! 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது:

மருத்துவம்‌ சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள்‌, சித்தா, ஆயுர்வேதம்‌, ஒம்காப்ஸ்‌, டாம்கால்‌ மற்றும்‌ யுனானி மருந்துகள்‌, சர்ஜிக்கல்ஸ்‌ மற்றும்‌ நியூட்ராசூட்டிக்கல்ஸ்‌ உள்ளிட்ட மருந்து வகைகள்‌ தமிழ்நாடு நுகர்வோர்‌ கூட்டுறவு இணையத்தால்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு வழங்கப்படும்‌. தமிழ்நாடு முழுவதும்‌ பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, முதல்வர்‌ மருந்தகம்‌ அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் / டி.பார்ம் (B.Pharm D.Pharm) சான்று பெற்றவர்கள்‌ அல்லது அவர்களின்‌ ஒப்புதலுடன்‌ மருந்தகம்‌ அமைக்க விருப்பம்‌ உள்ளவர்கள்‌ கூட்டுறவுத்துறை மூலம்‌ https://mudhalvarmarundhagam.tn.gov.in/ என்ற இணையதளத்தின்‌ வாயிலாக விண்ணப்பிக்கலாம்‌. விண்ணப்பம்‌ செய்யும்‌ வழிமுறைகள்‌, தேவையான ஆவணங்கள்‌ மற்றும்‌ திட்ட விவரங்கள்‌ மேற்படி இணையதளத்தில்‌ வழங்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்படும்‌ விண்ணப்பதாரர்களுக்குத்‌ தேவையான பயிற்சிகள்‌ வழங்கவும்‌ அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டம்‌ மூலம்‌ முதல்வர்‌ மருந்தகங்கள்‌ உருவாக்கப்பட்டு, வரும்‌ 2025 ஜனவரி மாதம்‌ முதல்‌ மக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement