Tenkasi Crime: மனைவியின் கள்ளக்காதலன் கழுத்தை துண்டித்து கொலை; துள்ளத்துடிக்க நடந்த பயங்கரத்தை அதிர்ச்சி பின்னணி.!
தன்னை அன்பாக கவனித்துக்கொண்ட கணவன் இருக்க, இடையில் கிடைத்த உறவை நம்பிய பெண்ணால் கணவன் கொலையாளியாகிய பதைபதைப்பு சம்பவத்தின் பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
செப்டம்பர் 22, தென்காசி (Tenkasi Crime News): தென்காசி மாவட்டத்தில் உள்ள கண்ணாடிக்குளம் பகுதியைச்சேர்ந்தவர் வேலுசாமி. இவரின் மனைவி இசக்கியம்மாள். இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜபுதுக்குடி கிராமம் ஆகும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து, இருவரும் தென்காசியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் வீட்டருகே முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், முருகனுக்கும் - இசக்கியம்மாளுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் வேலுசாமிக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். முருகனையும் எச்சரித்து இருக்கிறார். இதனால் கணவரிடம் சண்டையிட்ட மனைவி, தனது பெற்றோரின் வீட்டிற்கே புறப்பட்டு சென்றுள்ளார். Father Son Suicide: சொத்து பிரச்சனையில் தந்தை-மகன் தூக்கிட்டு தற்கொலை; சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
மனைவியின் பிரிவுக்கு முருகனே காரணம் என வேலுசாமி ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று முருகனின் கழுத்தை வெட்டி தனியாக எடுத்துக்கொண்டு மனைவியின் வீட்டிற்கு வேலுசாமி சென்றுள்ளார்.
அங்கு தனது மனைவியின் கள்ளக்காதலன் தலையை, இசக்கியம்மாளின் வீட்டின் முன்பு வைத்திருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முருகனின் தலையை கைப்பற்றினர். பின், வேலுசாமியிடம் நடந்த விசாரணையில் உண்மை தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)