Besant Nagar Matha Temple Festival: பெசன்ட் நகர் மாதா கோவில் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
சென்னையில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
ஆகஸ்ட் 29, சென்னை (Chennai News): சென்னை பெசண்ட் நகரில் (Besant Nagar) வேளாங்கண்ணி மாதா கோவில் 10 நாள் திருவிழாவையொட்டி, இன்று (ஆகஸ்ட் 29) மாலை 4.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாதா கோவில் திருவிழா (Annai Velankanni Festival) இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி வருகின்ற செப்டம்பர் 08-ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. கொடியேற்றத்திற்கு (Festival Flag Hoisting) பிறகு, நற்கருணை தேர் ஊர்வலம் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு, 6-வது அவென்யூ பீச் ரோடு, 3-வது மெயின் ரோடு, 2-வது அவென்யூ, 7-வது அவென்யூ வழியாக மீண்டும் தேவாலயத்திற்கு வரும். Velankanni Cathedral Festival: வேளாங்கண்ணி பேராலய திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
திருவிழாவையொட்டி (Festival) தேவாலயத்தில் நாள்தோறும் சிறப்பு பிராத்தனைகள், நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதனால், குறிப்பிட்ட நாட்களுக்கு சென்னை பெசண்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)