Tirupattur Shocker: காதல், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த அக்கா மகள் கொடூர கொலை; தாய்மாமா வெறிச்செயல்.. குற்றஉணர்ச்சியின்றி நடந்த பயங்கரம்.!
கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய தம்பிக்கு மகளை திருமணம் செய்து வைக்க விரும்பாத அக்கா, தன்னைவிட 17 வயது அதிகமான தாய்மாமா என 2 பெண்களின் சூழ்நிலையை கூட புரிந்துகொள்ள இயலாத கயவன் அக்கா மகளை கொடூரமாக கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
அக்டோபர் 16, நாட்றம்பள்ளி (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி கே.பந்தாரப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சரண்ராஜ். இவரின் மூத்த சகோதரிக்கு திருமணம் முடிந்து, 17 வயதுடைய மகள் இருக்கிறார். அவர் தற்போது அங்குள்ள கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், சரண்ராஜுக்கு தனது அக்கா மகளான 17 வயது சிறுமியை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாக தெரிய வருகிறது. இதனால் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அக்கா மகளை தானே திருமணம் செய்வேன் என ஊரிலும், அக்காவிடமும் சொல்லி வந்துள்ளார்.
ஆனால், சரண்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால், அக்காவும் இந்த விவகாரத்தில் தம்பிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். மேலும், சிறுமிக்கும் தாய்மாமாவை திருமணம் செய்ய விருப்பம் இல்லாத நிலையில், திருமண விவகாரத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். சிறுமியும் தனது எதிர்ப்பை கூறியுள்ளார். Canadian PM Justin Trudeau: நவராத்திரி திருவிழா கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்த கனடா பிரதமர்..!
ஒருதலையாக அக்கா மகளை காதலித்து வந்த சரண்ராஜ், தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளுமாறும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். அவரின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட, வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்கு சென்ற சரண்ராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ள சிறுமியை வற்புறுத்தி இருக்கிறார்.
அவர் திருமணத்திற்கு மறுத்ததால், ஆத்திரத்தில் அங்கிருந்து கத்தியால் அக்கா மகளை சரமாரியாக குத்திக்கொலை செய்து விட்டு சரண்ராஜ் தப்பியோடினார்.
மேலும், இந்த கொலை அரங்கேற்றிய சரண்ராஜ், "நாங்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். திருமணம் செய்ய வழியில்லை என்பதால் இந்த முடிவை எடுக்கிறேன். நானும் தற்கொலை செய்யப் போகிறேன்" என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருப்பத்தூர் காவல்துறையினர், விரைந்து செயல்பட்டு சரண்ராஜை தேடி வந்த நிலையில், கொலை செய்த குற்ற உணர்ச்சி இல்லாமல் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)