சிட்னி உணவகத்தில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
ஆஸ்திரேலியாவில் உணவகம் ஒன்றில் விஷவாயு (Gas Leak) தாக்கி 25 வயது நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 16, சிட்னி (World News): ஆஸ்திரேலியாவின் சிட்டினியில் (Sydney) வடமேற்கு ரிவர்ஸ்டோன் புறநகரில் ஹவேலி உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை இந்தியரான ரேஷம்சிங் என்பவர் நடத்தி வருகின்றார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 16) காலை 9.15 மணியளவில் விஷவாயு கசிவால் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Earthquake in Russia: ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
விஷவாயு தாக்கி பலி:
இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படை அதிகாரிகள், மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில், உணவகத்தில் துப்புரவுப் பணியாளரான 25 வயதுடைய நபர் உயிரிழந்தார். குறைந்தது 5 காவல்துறை அதிகாரிகளும், மேலும் 2 பேரும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உதவி கண்காணிப்பாளர் ஆடம் டியூபெரி தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)