PM Modi Meets Polish PM Tusk: போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு - நடந்தது என்ன?!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், போலந்து தலைநகர் வார்ஸாவில் இன்று நடைபெற்றது.

PM Modi Meets Polish PM Tusk (Photo Credit: @NarendraModi X)

ஆகஸ்ட் 22, போலந்து (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது. சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்து இருந்தார்.

இதனிடையே, 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாதம் ரஷ்யா சென்றார். இந்த நிலையில், அரசுமுறை பயணமாக போலந்து (Poland) சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் வார்சாவில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு 45 ஆண்டுகள் கழித்து போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். Thalapathy Vijay's TVK Flag: "தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடி" - தமிழக வெற்றிக் கழக கொடி விழாவில் விஜய் உரை..!

பிரதமர் மோடி உரை: முதல் நாள் பயணமான நேற்று போலந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அங்கு அவர் பேசியதாவது, "இங்குள்ள இயற்கை காட்சிகளம், உங்களின் உற்சாகமும் மிகவும் அற்புதமாக இருந்தது. நீங்கள் இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தீர்கள். இதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நிச்சயம் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எந்த நாட்டில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான். கோவிட் வந்தபோது,​​இந்தியா தான் முதலில் மனிதநேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறி அதன்படி செயல்பட்டது.

மற்ற நாடுகளின் குடிமக்களுக்கு இந்தியா உதவி வருகிறது. உக்ரைனில் போரினால் தாக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு நீங்கள் பெரிய உதவி செய்தீர்கள். இன்று அதற்காக நான் உங்கள் அனைவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவில் வெறும் 2 ஆண்டுகளில் 5ஜி நெட்வொர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் சென்றடையச் செய்திருக்கிறோம். இந்தியாவில் நாங்கள் இப்போது,​​'மேட் இன் இந்தியா' மற்றும் 6ஜி நெட்வொர்க்கிற்காக வேலை செய்து வருகிறோம். 2023ம் ஆண்டில் உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 16% க்கும் அதிகமாக இருந்துள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு வெகு தொலைவில் இல்லை. நாம் உலகத்தையே ஒரே குடும்பமாக கருதுகிறோம் " இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து இந்திய வம்சாவளியினருடன் பேசினார்.

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் சந்திப்பு: இரண்டாவது நாள் பயணமான இன்று போலந்து தலைநகர் வார்சாவில் அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்-கை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்தியா - போலந்து இடையே பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமான ஒத்துழைப்பு நமது ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கையின் அடையாளம். இந்தப் பகுதியில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியாவும் போலந்தும் சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவதில் முன்னேற்றம் கண்டு வருகிறது. பயங்கரவாதம் மிகப் பெரிய சவாலாக நம் முன் உள்ளது. Indian Doctor Arrested: அமெரிக்காவில் இந்திய மருத்துவர் கைது; சுமார் 13 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!

இந்தியாவும் போலந்தும் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள். அதேபோல், பசுமையான எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் இணைந்து செயல்படுவோம். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் அனைவருக்கும் கவலை அளிப்பதாக உள்ளன. எந்த ஒரு மோதலிலும் அப்பாவி உயிர்கள் பலியாவது, ஒட்டுமொத்த மனித குலத்தின் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் மிகப்பெரிய சவாலாகும். அமைதி பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்தியா மற்றும் போலந்து இடையே ஜாம் சாகேப் நவாநகர் இளைஞர் செயல் திட்டத்தை தொடங்க உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் போலந்தில் இருந்து 20 இளைஞர்கள் இந்தியாவிற்கு வருகை தருவார்கள்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் டொனால்ட் டஸ்க் உரை: பின்னர் பேசிய போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Polish PM Tusk), "இந்தியா போலந்து இடையேயான உறவை வலுவான கூட்டாண்மை நிலைக்கு கொண்டு செல்ல இன்று முடிவு செய்துள்ளோம். அமைதியான முறையில், சரியான முறையில், உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்த அறிவிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சில மணி நேரங்களில் பிரதமர் மோடி உக்ரைனுக்குச் செல்ல உள்ளார். உங்கள் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement