Actress Bike Accident: நடிகை அருந்ததி நாயருக்கு தீவிர சிகிச்சை – விபத்தில் சிக்கி படுகாயம்..!
திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் நடிகை அருந்ததி நாயர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மார்ச் 19, சென்னை (Cinema News): நடிகை அருந்ததி நாயர் பொங்கி எழு மனோகரா படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் சைத்தான், ஆயிரம் பொற்காசுகள், கன்னி ராசி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும், மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர், கடந்த 14-ஆம் தேதி சென்னை கோவளம் சாலையில் அவரது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் அருந்ததி நாயருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. Calf Born With Six Legs: வினோதமாக பிறந்த கன்றுக்குட்டி – ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்..!
இதனையடுத்து, அருந்ததி நாயருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் பரவின. இந்த விபத்து குறித்து அவரது சகோதரி அதன் உண்மைத்தன்மையை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது சகோதரி ஆர்த்தி வெளியிட்ட பதிவில், “மூன்று நாட்களுக்கு முன்பாக நடந்த விபத்தில் எனது அக்கா அருந்ததி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவிடன் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்” என பதிவிட்டுள்ளார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)