பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து.. 6 பேர் பரிதாப பலி..!
ஆந்திர பிரதேசத்தில் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 08, ராயவரம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் பானா சஞ்சா பட்டாசு உற்பத்தி நிலையத்தில், இன்று (அக்டோபர் 08) ஏற்பட்ட தீ விபத்தில் (Fire Accident) 6 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்த விசாரணையில், பட்டாசு உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். Bigg Boss Shutdown: கழிவுநீர் கூட போக வழியில்லையா?.. விதிகளை மீறிய பிக் பாஸ் ஸ்டுடியோவை இழுத்து மூட உத்தரவு.!
போலீஸ் விசாரணை:
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகுல் மீனா இதுகுறித்து கூறுகையில், பட்டாசு உற்பத்தி பிரிவு உரிமம் பெற்ற ஒன்றாகும். இந்த தீ விபத்தில் உயிரிழந்த 6 பேரின் அடையாளம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். மேலும், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இதோ:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)