Road Accident: கார் மீது பைக் மோதி கோர விபத்து.. 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!
மகாராஷ்டிராவில் கார் மீது பைக் மோதிய விபத்தில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 17, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், நாசிக் (Nashik) மாவட்டத்தில் கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பார்வை, மனம் மாற்றுத்திறன் சிறுமி பாலியல் வன்கொடுமை.. கர்ப்பத்தால் அம்பலமான உண்மை.!
போலீஸ் விசாரணை:
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அதில், விபத்து நள்ளிரவு 11.57 மணியளவில் நிகழ்ந்துள்ளது. கார் மற்றும் பைக் (Accident) பலத்த சேதமடைந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவு நேரம், தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டியதால் விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.
வீடியோ இதோ:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)