Taxi Fallen to 300 ft Deep Gorge: 10 பேருக்கு எமனாய் அமைந்த பயணம்; 300 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து பரிதாப பலி.. ஜம்முவில் சோகம்.!
மலைப்பாங்கான தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது, டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஜம்முவில் நடந்துள்ளது.
மார்ச் 29, ஜம்மு (Jammu Kashmir News): ஜம்முவில் உள்ள ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று கார் ஒன்று 10 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்தது. ரம்பான் மாவட்டத்தில் உள்ள பேட்டரி சேஷமா பகுதியில் கார் சென்றபோது, வளைவுப்பகுதியில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. Minor Girl Suicide: முதல் பருவமடைதலை எதிர்கொண்ட 14 வயது சிறுமி பயத்தில் தற்கொலை; பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.!
300 அடி பள்ளத்தாக்கில் விழுந்த (Car Fall into Gorge) வாகனம்: இதனால் அங்குள்ள 300 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கார் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல நொறுங்கியது. காரில் சிக்கிக்கொண்டவர்கள் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்துபோயினர். விபத்து குறித்து தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்புப்படை, மத்திய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். Youth Died in Bangalore: நண்பனின் மலக்குடலில் வெப்பக்காற்றை செலுத்தியதால் சோகம்; 24 வயது இளைஞர் கொடூர மரணம்.!
நேற்று இரவு விபத்து நடந்ததாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. மேற்படி விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)