Car Rammed into Shops: சாலையோர கடை மீது பாய்ந்த கார்; குடிகார ஓட்டுனரால் சோகம்.. 22 வயது இளம்பெண் பலி., 6 பேர் படுகாயம்.!

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, சாலையோரம் நின்ற பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

UP Ghazipur Accident 13-March-2024 (Photo Credit: @ANI X)

மார்ச் 14, காசிப்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசிப்பூர், பந்த் பஜார் பகுதியில் நேற்று மக்கள் தங்களுக்கு தேவையான (Ghazipur Bazaar Accident) பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தனர். இரவு 09:30 மணியளவில் கார் ஒன்று அப்பகுதியில் வந்து, சாலையோரம் இருந்த தள்ளுவண்டியின் மீது மோதி விபத்திற்குள்ளானது. விபத்தை கண்டு பொதுமக்கள் பதறியபடி உதவ முன்வரவே, காரை இயக்கிய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தி தப்பிச்செல்ல முயற்சி: ஆனால், பதற்றத்தில் காரை இயக்கி, சாலையோரம் எதிர்திசையில் இருந்த கடைக்குள் வாகனத்தை செலுத்தி இருக்கிறார். இதனையடுத்து, ஒன்றுதிரண்ட மக்கள் கார் ஓட்டுனரை சரமாரியாக அடித்து நொறுக்கினர். அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. Cylinder Explosion In Pakistan: சிலிண்டர் வெடித்து 3 மாடிக்கட்டிடம் தரைமட்டம்… பாகிஸ்தானில் பரபரப்பு..! 

இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலி: இதனையடுத்து, விபத்து குறித்து காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 22 வயது இளம்பெண் உட்பட 6 க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 22 வயது இளம்பெண் சீதா தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஞ்சியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு: காயமடைந்தவர்கள் அங்குள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஓட்டுனரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement