Road Accident: கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!
உத்தரகாண்ட்டில் லாரி - கார் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 12, டேராடூன் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் (Dehradun) ஓஎன்ஜிசி சவுக் பகுதியில் நேற்று இரவு (நவம்பர் 11) லாரியும் இன்னோவா காரும் நேருக்கு நேர் மோதி (Car - Cargo Truck Accident) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்த நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Boy Dies By Dog Bite: நாய் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சேதமடைந்த வாகனத்தில் இருந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில், 3 பெண்கள் மற்றும் 3 வாலிபர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)