Mother Kills Her 3-Year-Old Child: ஆண் நண்பருக்காக 3 வயது பெண் குழந்தையை கொன்று வீசிய தாய்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 24 அன்று சிவப்பு நிற சூட்கேஸில் மிஸ்டி என்ற மூன்று வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சாம்பவத்தின் கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Mother Kills Her Child (Photo Credi: @SachinGuptaUP X)

ஆகஸ்ட் 26, முசாபர்பூர் (Bihar News): பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 24 அன்று சிவப்பு நிற சூட்கேஸில் மிஸ்டி என்ற மூன்று வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் உடலை மீட்ட அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். Trichy Horror: மருத்துவர்களின் ஆலோசனையின்றி கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண்.. பரிதாபமாக உயிரிழப்பு..!

தற்போது அந்த கொலையை அவரது தாயார் காஜல் செய்தது () தெரியவந்துள்ளது. காஜல் ஒரு வருடத்திற்கு முன்பு தனது காதலர் சஞ்சீத் குமாரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். மகளை வைத்துக் கொள்ள சஞ்சீத் விரும்பாதத்தில், மகளை தாய் கொன்றுள்ளார். இதனால் காஜலை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் தீவிர விசாரணையில், தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையைக் கொலை செய்ததாக தாய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement