RBI Rules for Bank Account:அதிக வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு: ஆர்பிஐ விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.!
நம் அன்றாட வாழ்வில் சேமிப்புக்கும் பணப்பரிவர்த்தனைகளுக்கும் வங்கி கணக்குகள் அத்தியாவசியமாக இருக்கிறது. அதற்கேற்ப ஒரு தனிநபர் எத்தனை வங்கி கணக்குகள் வைத்திருக்கலாம் என்பதை ஆர்பிஐ வரையறை செய்திருக்கிறது.
செப்டம்பர் 26, மும்பை : நம் எல்லோரிடமும் வங்கிக் கணக்கு நிச்சயமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் வைத்திருப்பவர்கள் ஆவர். சம்பளத் தொகை பெறுவது, சேமிப்பை முதலீடு செய்வது என்று பல்வேறு தேவைகளுக்கு வங்கிக் கணக்கு பயன்படுகிறது.
இப்போது அரசின் நலத்திட்ட உதவித்தொகைகளும் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு தான் அனுப்பி வைக்கப்படுகிறது. 2 Planes Collide: நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்; 5 பேர் பரிதாப பலி..!
ஒரு தனிநபர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்திருக்கலாம் என்பதற்கு ரிசர்வ் வங்கி விதிமுறை வகுத்திருக்கிறது. ஒருவர் சேமிப்பு கணக்கு, நட்பு கணக்கு, கூட்டுறவு கணக்கு மற்றும் இரண்டு சம்பள கணக்குகள் என மொத்தம் ஐந்து வங்கிக் கணக்குகள் வரை வைத்திருக்கலாம் என்று ஆர்பியை (Reserve Bank of India) அறிவித்திருக்கிறது.
தினசரி மற்றும் மாதச் சம்பளத்தை சேமிக்க விரும்புபவர்கள், சேமிப்பு கணக்கை திறக்கலாம். சேமிப்பு கணக்கை தான் நம் நாட்டில் பெரும்பாலானோர் முதன்மையாக பயன்படுத்துகின்றனர். சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி வழங்கப்படுவதோடு, வட்டி விகிதம் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடக் கூடியது.
அதேபோல் மக்கள் வணிக பணப்பரிவர்த்தனைகளுக்காக நட்பு கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)