Karnataka Shocker: கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் நடந்த சோகம்.. 3 உயிர்கள் பறிபோனது..!
விரக்தியில் வாழ்ந்து வந்த தாய் தனது 2 குழந்தைகளையும் கொன்று, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மார்ச் 05, சாம்ராஜ்நகர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹொரேயாலா கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் மற்றும் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு, கொனனூறு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஜோதி, தனது கணவருடன் ஹொரேயாலா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இத்தம்பதிகளுக்கு பாந்தவ்யா(வயது 7), மானசா(வயது 3), என 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஜோதி மனமுடைந்து வாழ்ந்து வந்தார்.
அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: நேற்று காலையில் வழக்கம்போல யோகேஷ் வேலைக்கு சென்றுள்ளார். மனமுடைந்து வீட்டில் தனியாக இருந்த ஜோதி, தனது 2 மகள்களையும் தூக்கிலிட்டு கொன்று, பின்னர் அவரும் தூக்குப்போட்டு (Mother killed two Daughters) தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே ஜோதியின் வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினர், ஜோதி மற்றும் அவரது குழந்தைகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காவல்துறையினர் விசாரணை: தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதி மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)