Young Women Raped by 5 Friends: நள்ளிரவில் துரோகியான நண்பர்கள்: பெண்ணுக்கு மதுவை ஊற்றி ஐவர் கும்பல் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.!
நண்பர்கள் தானே என ஐவர் கும்பலை தனது இல்லத்திற்குள் அனுமதித்த பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
நவம்பர் 13, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா (Agra, UttarPradesh), தஜ்நகரி பகுதியில் உள்ள குடியிருப்பில், இளம்பெண் தனது வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு அப்பகுதியை சேர்ந்த ரவி, மனிஷ், தேவ் உட்பட ஐந்து பேர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று இவர்கள் அனைவரும் பெண்ணின் வீட்டிற்கு மறைமுக திட்டத்துடன் சென்ற நிலையில், அதனை அறியாத இளம்பெண்ணும் நண்பர்களுடன் இரவு வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
இரவு 11 மணியளவில் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மதுபானத்தை ஊற்றி குடிக்கவைத்த கொடூரர்கள், ஐவராக சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வீட்டிற்குள் பெண் உதவிகேட்டு அலறி இருக்கிறார். Erode Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார்: 3 பேர் பரிதாப பலி.!
பின் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்துவிட, அங்கு வந்த பெண்மணி அவர்களிடம் உதவிகேட்டு அலறியுள்ளார். இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்விடத்திற்கு அதிகாரிகள் வந்ததும், அவர்களிடம் பெண் தனக்கு நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். அவரிடம் புகாரை பெற்ற காவல் துறையினர், ஐவரில் மனிஷ், ரவி, தேவ் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.
அக்கம் பக்கத்தினர் உதவிக்காக வந்தபோது, பெண் வீட்டிற்குள் செல்ல மறுத்து அலற, அவரை வலுக்கட்டாயப்படுத்தி நண்பர்கள் வீட்டிற்குள் அழைத்துச்செல்ல முயற்சித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.
நண்பர்கள் மது ஊற்றிவிட்டபோதையிலும், பெண் தனது நண்பர்களின் கொடூரத்தில் இருந்து தப்பிக்க போராடியுள்ளார். ஆனால், அவரின் மீது கொடூர தாக்குதலை அக்கும்பல் நிகழ்த்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)