Homemade Facial Scrub: முகத்தை சுத்தப்படுத்த.. இறந்த செல்களை நீக்க.. பளபளபாக்கும் பழ ஸ்கரப்..!
ஸ்கரப் செய்வதால், சருமம் நன்கு மிருதுவாகவும், சருமத்துளைகள் நன்கு விரிவடைந்து அழுக்குகள் வெளியேறி சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும்.

மே 13, சென்னை (Chennai): சருமத்தில் இறந்த செல்களை அகற்றவும், முகப்பருக்களை குறைக்கவும் ஸ்கரப் பயன்படுகிறது. அதிலும் வீட்டிலேயே கிடைக்கும் பழ ஸ்கரப் சருமத்தை மேலும் பொழிவாக்குகிறது. ஸ்கரப் பயன்படுத்திய பிறகு டோனர் அல்லது ரோஸ் வாட்டர் உபயோகிக்க வேண்டும்.
வாழைப்பழ ஸ்கரப்: வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து மசித்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி சக்கரை சேர்த்துக்கொள்ளவும். சிறிது தேன் அல்லது தயிர் சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 5 நிமிடத்திற்கு உலர விட்டு, பின் குளிந்த நீரில் கழுவிட வேண்டும். Landslide On Mountain Road: மலைச்சாலையில் மண் சரிவு.. கொடைக்கானல் செல்வோர்க்கான அறிவிப்பு..!
பப்பாளிபழ ஸ்கரப்: தோல் சீவிய பப்பாளி பழத்தை அரைத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிர், தேன், மற்றும் நான்கு துளி எலுமிச்சை சேர்த்து கலந்து கொள்ளவும். இக்கலவையை 5 முதல் 7 நிமிடம் முகத்தில் தடவி உலரவிட்ட பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
எலுமிச்சை ஸ்கரப்: அரை எலுமிச்சை பழத்தை வெட்டி சர்க்கரையில் தொட்டு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். இந்த ஸ்கரபை முகத்தைவிட கை கால்களில் பயன்படுத்தலாம். ஏனெனில் பலருக்கு முகத்தின் தோல் மென்மையாக இருப்பதால் அது சருமத்தை பாதிக்கும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)