Couple Enjoy During Menstruation Days: மாதவிடாய் நேரத்தில் உடலுறவு.. நல்லதா? கெட்டதா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

மாதவிடாய் நாட்களில் துணையுடன் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் உச்சக்கட்டம் காரணமாக எண்டோர்பின் வெளிப்பட்டு, வயிற்று வலி, மன அழுத்தம் குறையும்.

Couple Enjoy Bed | Periods Day Napkin (Photo Credit: Pixabay)

நவம்பர் 13, சென்னை (Health Tips): பெண்களுக்கு மாதம் ஒருமுறை, சுழற்சி முறையில் ஏற்படும் மாதவிடாய் (Periods), அவர்கள் பூப்பெய்த நாளில் இருந்து மாதவிடாய் சுழற்சி முடியும் வரை தொடரும். மாதவிடாய் (Menstruation Days) நாட்களில் பெண்கள் கடுமையான வயிற்று வலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் பிற நாட்களில் நல்ல உடல் நலத்துடன், சுறுசுறுப்புடன் காணப்படும் பெண்கள், அந்த 3 முதல் 7 நாட்கள் உடல்நலம் குன்றியவாறு, வலிமை இழந்து காணப்படுவார்கள்.

மாதவிடாய் நாட்களில் துணையுடன் உடலுறவு (Sexual Intercourse) கொள்ளும்போது ஏற்படும் உச்சக்கட்டத்தின் (Orgasm) காரணமாக எண்டோர்பின் வெளிப்பட்டு, வயிற்று வலி குறையும், மன அழுத்தம் நீங்கும். பலரும் மாதவிடாய் நாட்களில் வெளியேறும் இரத்தம் அசுத்தமானது என்ற எண்ணத்தை கொண்டுள்ளனர். மாதவிடாயின்போது வெளியிரும் இரத்தம், உடலில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இரத்தம் ஆகும். இதில் ஆரோக்கியம் கொண்ட இரத்த திசுக்கள் நிறைந்துள்ளன.

தம்பதிகள் (Couple) மாதவிடாய் நேரத்தில் தங்களின் துணையுடன் உடலுறவு (Couple Enjoy Bed) மேற்கொண்டால், பிற நேரங்களை விட அதிகளவு இரத்தம் வரலாம். உடலுறவின்போது லேசான இரத்தக்கசிவு இருந்தாலும், உடலுறவுக்கு பின் அதிக இரத்தம் (Bleeding) வெளியேறும். இதனால் பெண்கள் உச்சகட்ட இன்பத்தினை அடையும்போது, கருப்பை மாசுக்கள் வெளியேறும். இரத்தக்கசிவு நாட்களும் குறையும். Hyderabad Shocker: கார் மெக்கானிக் பணியின்போது தீப்பிடித்து பயங்கரம்; அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேர் பலி.. தாய்-மகன் மீட்கப்படும் பதைபதைப்பு காட்சிகள்.! 

Couple Enjoy Bed (Photo Credit: Pixabay)

சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், விபரம் அறிந்த துணைகள் மாதவிடாய் நாட்களில் தங்களின் உடலுறவை மேற்கொள்வது, பிற காலத்தினை விட அதிகளவு பாலுணர்ச்சியை மிகுதியாக வழங்குவதாகவும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அதேபோல, சாதாரண நாட்களில் உச்சகட்டம் அடைய திணறும் பெண்கள், மாதவிடாயின் போது அதிக இன்பத்தை அடைகின்றனர். மாதவிடாய் நாட்களில் உடலுறவை தவிர்க்க முக்கியமாக கூறப்படுவது பால்வினை நோய்கள் சார்ந்த பிரச்சனை தான். ஏனெனில் இரத்தத்தை வெளியேற்ற கருப்பைவாய் சற்றும் அதிகமாக திறக்கும். இதனால் நோய்வாய்ப்பட்ட நிலையில் துணையில் ஒருவர் இருந்தாலும், அது பெரிய பிரச்சனையை உண்டாகும்.

இருவருக்கும் விருப்பம் இருப்பின், பாதுகாப்பான வகையிலான உடலுறவை மேற்கொள்வதே நல்லது. சிறு அலட்சியமும் பெரிய விபரீதத்தில் கொண்டு சேர்த்துவிடும். கருத்தரித்தலை தவிர்க்க விரும்பும் தம்பதிகள், மாதவிடாய் நாட்களில் உடலுறவு மேற்கொண்டால் கரு தாங்காது. இதனால் கருத்தடை சாதனம் இன்றி தம்பதிகள் உல்லாசமாக இருக்கலாம். மாதவிடாய் நாட்களில் உடலுறவு கொள்ளும் பெண்களுக்கு, உச்சக்கட்டத்தின் மூலமாக நல்ல ஹார்மோன்கள் கிடைக்கும். இதனால் உடலுக்கு நன்மைகள் ஏற்படும், மன அழுத்தம் குறையும். கால் மற்றும் உடல் வலி சரியாகும். மாதவிடாய் வலி குறையும்.

பின்குறிப்பு: மாதவிடாய் நாட்களில் காய்ச்சல், பால்வினை நோய்கள் இருப்பவர்கள் கட்டாயம் உறவை தவிர்ப்பது நல்லது. இவை தனிநபர்கள் அல்லது அவர்களது துணையின் விருப்பம் என்பதால், துணையை நிர்பந்திப்பதும் தவறானது. உடலுறவு மேற்கொண்டால் பாதுகாப்பான வழிகளை தேர்வு செய்யவும்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement