Trending Video: காட்டாற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிய பெண்கள்.. உதவிக்கரம் நீட்டிய உள்ளூர் மக்கள்.!
பீகார் லங்குரியா மலை நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கில் சிக்கிய பெண்களை மக்கள் துணிச்சலுடன் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜூலை 01, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம் லங்குரியா மலையின் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் நடுவே சிக்கித்தவித்த ஆறு பெண்களை உள்ளூர் மக்கள் துணிச்சலுடன் முன்வந்து காப்பாற்றி இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், பலரும் கிராம மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் பல ஆண்டுகளுக்கு முன் இது போன்ற வெள்ளம் சென்றதாகவும், தற்போது இந்த ஆண்டு தான் மீண்டும் இந்த ஆற்றில் வெள்ளம் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளன. சாக்லேட் கேட்ட குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்.!
வெள்ளத்தில் சிக்கிய பெண்களை மக்கள் காப்பாற்றிய வீடியோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)