Minor Girl Suicide: அனுதினமும் பாலியல் தொல்லை; 18 வயது சிறுமியின் விபரீத முடிவால் கண்ணீரில் பெற்றோர்.!
தினமும் பதின்ம வயதுடைய சிறுமியை குறிவைத்து பாலியல் ரீதியான தொல்லையை ஏற்படுத்திய இருவரால், இறுதியில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறி இருக்கிறது.
மார்ச் 17, பாடெக்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாடெக்பூர் மாவட்டம், ஹுஸைங்கஞ்ச், அபிநயா லட்சுமண்பூர் கிராமத்தில் 18 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியை கடந்த சில நாட்களாக அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்துபோன சிறுமி, இன்று நேற்று அவரின் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். Russia Election Cyber Attack: ரஷியா தேர்தலை சீர்குலைக்க சதி?.. 1.6 இலட்சம் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றசாட்டு.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)