Atal Setu Bridge Accident: அதிவேகத்தால் காத்திருந்த விபத்து; அதிஷ்டத்தால் தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ.!
வாகனங்களின் இயக்கம் என்பதும் மிதமான வேகத்தில் இருப்பது மட்டுமே நன்மையை தரும். அவசரம், அலட்சியம், அதீத நம்பிக்கை போன்றவை நொடியில் விபத்தை ஏற்படுத்திவிடும்.
ஜனவரி 22, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில், கடலுக்கு நடுவே 16.5 கி.மீ தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம், பிரதான போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவி செய்கிறது. இந்த பாலத்தில் பயணம் செய்து எளிதாக மும்பையில் இருந்து நவி மும்பையை சென்றடையலாம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இப்பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், பாலத்தில் பயணம் செய்த கார் ஒன்று அதிவேகமாக சென்று, சாலைத்தடுப்பில் மோதி உருண்டு விபத்திற்குள்ளானது. இது அடல் சேது பாலத்தில் ஏற்பட்ட முதல் விபத்தாக கருதப்படுகிறது. இந்த வீடியோ விபத்திற்குள்ளான காருக்கு பின்னால் வந்த மற்றொரு காரின் டேஷுகேமில் பதிவாகி இருக்கிறது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விபத்தில் லேசான காயத்துடன் பயணிகள் உயிர் தப்பினர். Zombie Virus Update: உலகளவில் பரவப்போகும் ஜாம்பி வைரஸ்.. புவி வெப்பமயமாதலால் அடுத்த சம்பவம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)