Jharkhand Road Accident: ஜார்க்கண்டில் கோர விபத்து.. சுக்குநூறான கார்.. 4 பேர் பலி..!

ஜார்க்கண்டில் வாகனம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மார்ச் 19, ஜார்கண்ட் (Jharkhand News): செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள சந்தில் காவல் நிலையத்தின் கந்தர்பேடா என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது கட்டுப்பாடற்று வந்த கார் மோதியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆதித்யாபூரைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் ஜேசிபி மூலம் காரை நிமிர்த்தி, காரின் கதவை கேஸ் கட்டர் மூலம் பல பாகங்களாக வெட்டி நான்கு இளைஞர்களின் உடல்களையும் வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Fans Vandalise Thalapathy Vijay's Car: அரசியலுக்கு வந்த பின் விஜய் காரை நொறுக்கிய கேரள ரசிகர்கள்.. நடந்தது என்ன?.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement