Viral Video: செல்பி எடுக்க முயன்றதால் தகராறு.. வைரல் வீடியோ உள்ளே..!
உத்தர பிரதேசத்தில் சமூக வலைதளத்தில் பிரபலமான இரு பெண்களுடன் செல்பி எடுக்க முயன்றபோது, இளைஞர்களுடன் ஏற்பட்ட மோதல் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆகஸ்ட் 18, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த மேஹக் மற்றும் பாரி ஆகிய இரு பெண்களும், ஆபாசமான ரீல்ஸ் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் ஆவர். ஆபாசமான காணொளிகளை வெளியிட்டதற்காக இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அம்ரோஹா பகுதியில் இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு சக்கர வாகனங்கள் மோதியதால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். ஆனால், உண்மையில் மேஹக் - பாரி, சில இளைஞர்கள் வற்புறுத்தி செல்பி எடுக்க முயன்றதே இந்த மோதலுக்கு முக்கிய காரணம் என்று கூறுகின்றனர். அவர்கள், வலுக்கட்டாயமாக செல்பி எடுக்க முயன்றுள்ளனர். இதனை மறுத்தபோது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. C.P. Radhakrishnan: குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்.. தமிழருக்கு வாய்ப்பு.. யார் இவர்?