Youths Getting Penalty: படியில் அமர்ந்து இரயிலில் சாகச பயணம்; இளைஞர்களுக்கு அபராதம் விதித்து ஆப்படித்த இரயில்வே காவல்துறையினர்.!
இரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர்களுக்கு, இரயில்வே காவல் துறையினர் அபராதம் விதித்தனர். வீடியோ ஆதாரத்துடன் இளைஞர்கள் சிக்கியதால், அறிவுரை வழங்கிய பின் அபராதம் விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 29, மேட்டுப்பாளையம் (Coimbatore News): கோயம்புத்தூர் - மேட்டுபாளையத்தை (Coimbatore to Mettupalaiyam Train) இணைக்கும் வகையில், தென்னக இரயில்வே சார்பில் இஎம்யு பயணிகள் இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயிலில் கோவைக்கு வரும் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இதன் வாயிலாக மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகள், அங்கிருந்து ஊட்டி, நீலகிரிக்கு பயணிப்பார்கள். இந்நிலையில், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் பயணம் செய்த இரயிலில், இளைஞர்கள் குழு ஒன்று ஆபத்தான வகையில் படியில் அமர்ந்து பயணம் செய்தது. இதுகுறித்த சம்பவம் கடந்த 28ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியாகவே, மேட்டுப்பாளையம் இரயில்வே காவல் துறையினர் இளைஞர்களை அடையாளம் கண்டு அபராதம் விதித்தனர். மேலும், படியில் அமர்ந்துகொண்டு பயணம் செய்யக்கூடாது எனவும் அறிவுரை வழங்கி இளைஞர்களை அனுப்பி வைத்தனர். Cop Died an Accident: சாலை விபத்தில் காவலர் பரிதாப பலி.. சாலை தடுப்பில் மோதி நொடியில் பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)