Elephant Died in Coimbatore: மின்கம்பத்தால் நேர்ந்த சோகம்.. மின்சாரம் தாக்கி யானை பரிதாப பலி.. கோவையில் துயரம்.!

Elephant Death: உணவு தேடி தோப்புக்குள் புகுந்த யானை மின்சார கம்பிகளை (Electric Wire) மோதியதில், மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் பாய்ந்து (Electric Attack Death) விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காட்டு யானை (Elephant Death Coimbatore) பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சோகம் கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் (Thondamuthur) வனப்பகுதியில் நடந்தது.

Elephant Death in Coimbatore (Photo Credit: @ANI X)

அக்டோபர் 23, தொண்டாமுத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர், குப்பேபாளைம் பகுதியில், இன்று அதிகாலை நேரத்தில் காட்டு யானை ஒன்று உணவு தேடி வந்துள்ளது. இந்த ஒற்றை காட்டு யானை சாலையோரம் வயல் பகுதியில் இருந்த மின்கம்பத்தை முட்டியதாக தெரியவருகிறது. இதனால் மின்சார கம்பம் சாய்ந்த நிலையில், யானை மின்தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து மின்சாரத்தை துண்டித்து யானையின் உடலை மீட்டுள்ளனர். யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். Chennai News: அசந்து உறங்கிய தாய்.. மழைநீர் குட்டையில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி.. மழைக்காலத்தில் பெற்றோர்களே கவனம்.! 

கோவையில் மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து யானை மரணம் (Elephant Died in Coimbatore):

25 வயதுடைய ஆண் யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement