Krishna Janmashtami 2024: தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்.. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு மகிழ்ச்சி..!
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கோகுலஷ்டமி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இல்லத்தரசிகள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 26, சென்னை (Chennai News): கிருஷ்ண ஜெயந்தி (Krishna Janmashtami) என்கிற கோகுலாஷ்டமி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருஷ்ணர் சிலைகள், பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. மக்கள் இன்று வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு மகிழ்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தண்டையார் பேட்டையில் இல்லத்தரசிகள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் பாமா ருக்மணி வேடமடைந்து (Krishna Jayanti) பூஜைகள் செய்தனர். ராதை வேடம் அணிந்து பகவான் கிருஷ்ணரை துதி பாடி பூஜை செய்யது வணங்கி மகிழ்ந்தனர். Pudhumai Penn Scheme: பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் புதுமைப் பெண் திட்டம்.. விபரம் உள்ளே..!
சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்:
விருதுநகரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: