Israel Hamas War: நிலத்தடி சுரங்கத்திற்குள் கொல்லப்பட்ட 5 இஸ்ரேலியர்கள் உடலை மீட்டது இராணுவம்; ஹமாஸ் பிடியில் சிக்கியவர்களுக்கு நடந்த சோகம்.!

இஸ்ரேல் தாக்குதலையும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

Israel Palestine War (Photo Credit: @IDF X)

டிசம்பர் 25, காசா (Gaza Strip): கடந்த அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் - பாலஸ்தீனியம் இடையே தொடங்கிய போர், தற்போது இரண்டு மாதங்களை கடந்து நடைபெற்று வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்காமல் நாங்கள் ஓய மாட்டோம் என்று இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். இதனால் காசாவுக்குள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலிய படையினர் (Israel - Hamas Conflict) ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணைய கைதியாக பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டோரின் உடல்களை தொடர்ந்து மீட்டு வருகின்றது. நிலத்திற்கு அடியில் சுரங்கம் அமைத்து வசித்து வந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், பிணைய கைதிகளை கொலை செய்து அங்கேயே சடலங்கலாக விட்டுச் சென்றுள்ளனர். தற்போது உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு துறையினரால் மீட்கப்பட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. Vehicle Roll Down George: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து பயங்கர விபத்து; 2 பேர் பலி, 13 பேர் படுகாயம்.!