CSG Vs TGC: சேப்பாக் த்ரில் வெற்றி.. நடப்பு தொடரில் ஆதிக்கம்..!
2025 டிஎன்பிஎல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் 21வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஜூன் 23, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடைபெற்று முடிந்தன. இதனையடுத்து, 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 23) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழஸ் (CSG Vs TGC, Match 21) அணிகள் மோதின. CSG Vs TGC: கேப்டன் அபராஜித், விஜய் சங்கர் அபாரம்.. திருச்சி வெற்றிக்கு 179 ரன்கள் இலக்கு..!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (Chepauk Super Gillies Vs Trichy Grand Cholas):
பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் அணி, ஜெயராமன் சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் அணிக்கு கே ஆஷிக் 5 ரன்னில் அவுட்டானார். ஹரிஹரன் 25 ரன்னில் வெளியேறினார். இதன் பின்னர், கேப்டன் அபராஜித் - விஜய் சங்கர் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டனர். கேப்டன் அபராஜித் அரைசதம் (63 ரன்கள்) கடந்து அவுட்டாகினார். அடுத்து விஜய் சங்கர் 59 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். சேப்பாக் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் அடித்தது.
சேப்பாக் அணி த்ரில் வெற்றி:
இதனையடுத்து, திருச்சி அணி 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. ஆரம்பத்தில் வசீம் அகமது 10 ரன்னில் நடையை கட்டினார். மறுபுறம், கேப்டன் சுரேஷ் குமார் 63 ரன்கள், கவுசிக் 45 ரன்கள் அடித்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, சஞ்சய் யாதவ் தனியாளாக போராடி (29 ரன்கள்) அவுட்டானார். இறுதியில், திருச்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் அடித்தது. இதன்மூலம், சேப்பாக் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)