50 Girls Abused: காதலர்களுடன் நள்ளிரவில் சுற்றும் பெண்கள் டார்கெட்.. போலீஸ் அதிகாரியாக நடித்து 50 பெண்களை சீரழித்த காமக்கொடூரர்கள் சுட்டுப்பிடிப்பு.. ADSP வெள்ளத்துரை அதிரடி.!
காதல் ஜோடிகளை குறிவைத்து ஏற்கனவே பல கும்பல் வழிப்பறி போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், காவலர்கள் என்ற பெயரில் வாக்கி-டாக்கியோடு இளம்பெண்களை குறிவைத்து இருவர் பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 15, ஸ்ரீபெரும்புதூர்: ஏடிஎஸ்பி வெள்ளைத்துரையை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பி செல்ல முயற்சித்தவர்களை அதிகாரிகள் சுட்டுப்பிடித்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் (Sriperumbudur, Kanchipuram), எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் 20 வயது பெண்மணி, தனியார் நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று தண்டலம் பகுதியில் தனது ஆண் நண்பரோடு பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, நிகழ்விடத்திற்கு காவல் அதிகாரிகளின் சீருடையில் வந்த 2 பேர், பெண்ணிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி தங்களுடன் அழைத்து சென்று (2 Man Gang Abused Young Girl Name of Police) பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
இதன்பேரில் விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர், செல்போன் தொடர்புகளை வைத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்த கும்மிடிபூண்டியை சேர்ந்த நாகராஜ், பிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்ய விரைந்தனர். குற்றவாளிகள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி தப்பி செல்ல முயற்சித்தனர். King Cobra Drinks Water: ஐயோ.. பாம்புக்கு தண்ணீர் கொடுத்த இளைஞர்.. மனிதத்தை பிஜிஎம் போட்ட இன்ஸ்டா பதிவு.. வினையை விலைகொடுத்து வாங்காதீங்க..!
இதனையடுத்து, நிகழ்விடத்தில் இருந்த ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான அதிகாரிகள் குற்றவாளிகளை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், நாகராஜின் கால்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. பிரகாஷ் தவறி விழுந்ததில் இரண்டு முட்டி எலும்புகள் உடைந்துள்ளன.
குற்றவாளிகளை மீட்ட காவல் துறையினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாணையில், நள்ளிரவு நேரங்களில் காதலருடன் தனிமையில் சந்திக்கும் பெண்களே குறி என்பது அம்பலமானது.
தற்போது வரை இவர்கள் 50 க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளிடம் காவல்துறையினர் என கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டதோடு, பெண்களை தனியே அழைத்து சென்று இருவரும் பலாத்காரம் செய்யும் கொடூரத்தையும் அரங்கேற்றியுள்ளனர். இவர்களிடம் இருந்து வாக்கி தாக்கி உட்பட பல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையை பொறுத்தமட்டில் ஸ்ரீபெரும்புதூர், வல்லம், ஒரகடம் உட்பட சென்னையின் புறநகர் பகுதிகளில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பெண்கள் பணியாற்றும் போது காதல் வயப்பட்டு சென்னையை நள்ளிரவு நேரங்களில் சுற்றி மகிழ்கின்றனர். அவர்களே இவர்களின் பிரதான டார்கெட்டவும் அமைந்துள்ளனர்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 15, 2023 12:35 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)