Perambalur Shocker: கள்ளக்காதல் ஹீரோவாக கணவன்; செருப்பால் விலகிய மனைவி கூலிப்படை ஏவி கொலை.. பதைபதைக்கும் முழு விபரம் உள்ளே.!

அன்பு மனைவி உடன் இருந்தும், கணவன் கள்ளக்காதல்கள் வயப்பட்டு மனைவியை கொலை செய்துள்ள கொடூரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. அண்ணியுடன் தனிமையில் ஒதுங்கியவரை துடைப்பத்தால் நொறுக்கியெடுத்த மனைவிக்கு கணவன் தந்த பரிசாக அமைந்த மரணம் சொந்தங்களை உலுக்கியுள்ளது.

Victim Praveena | Accuse Raj Kumar & Anandi (Photo Credit: Facebook)

அக்டோபர் 27, பெரம்பலூர் (Perambalur Crime News): 2017ல் ஆசைப்பட்ட மாமா மகளுடன் திருமணம், 2 குழந்தைகளுக்கு தகப்பன் என இருந்தும், காம எண்ணத்தை மேலோங்கி செயல்பட்ட கணவன் கள்ளக்காதல்கள் வயப்பட்டு இறுதியில் மனைவியை கொலை செய்து, 2 பிஞ்சுகளை நிர்கதியாக தெருவில் நிறுத்திய பயங்கரம் பெரம்பலூரை அதிரவைத்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் கிராமத்தில், கடந்த அக். 23ம் தேதி ப்ரவீனா என்ற பெண்மணி கழுத்தறுத்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரின் கணவர் ராஜ்குமார், உடலில் சிறு வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடியவாறு இருந்தார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ராஜ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ப்ரவீனாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

கொலையாளிகளுக்கு அதிகாரிகள் வலைவீசிய நிலையில், அதிர்ச்சி திருப்பமாக ப்ரவீனாவின் கொலையில், அவரின் கணவர் ராஜ்குமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து ராஜ்குமார், அவரின் அண்ணி ஆனந்தி, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்த கூலிப்படை ஆட்கள் தீபக், சந்தோஷ் பாபு, சரவணகுமார், லக்கி, பப்லு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். Husband Kills Wife Arrest After 6 Month: கோபக்கார மனைவியை கொன்று அப்பாவியாக வாழ்க்கை; 6 மாதங்கள் துப்பறிந்து, கொலைகார கணவனை தூக்கிய போலீஸ்.! 

Crime File Picture (Photo Credit: Pixabay)

இவர்களிடம் நடந்த விசாரணையில், தறிகெட்ட கள்ளக்காதல் பழக்கத்தின் காரணமாக கொலை நடந்தது அம்பலமானது. ராஜ்குமார் பெரம்பலூரில் உள்ள விஜயகோபாலபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்குள்ள சிறுவயலூரில் வசித்து வந்த ராஜ்குமாரின் தாய்மாமா மகள் ப்ரவீனாவை, கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டார்.

தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதற்கிடையில், ராஜ்குமாருக்கு சுரேஷ் என்பவரின் மனைவி சுகன்யாவோடு பழக்கம் ஏற்படவே, இருவருக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் சுகன்யாவுடன் ராஜ்குமார் மனைவிக்கு தெரியாமல் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். வீட்டிற்கும் வரவில்லை. இதனால் கணவர் மாயமாகிவிட்டாரோ? அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ? என்ற பயத்தில் ப்ரவீனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்ற பெரம்பலூர் காவல் துறையினர், கள்ளக்காதல் ஜோடியான ராஜ்குமார் - சுகன்யாவை காவல் நிலையம் அழைத்து வந்து அறிவுரை வழங்கி அவரவர் கணவன் - மனைவியுடன் சேர்த்து அனுப்பி வைத்துள்ளனர். 15 நாட்கள் அமைதியாக இருந்த கள்ளக்காதல் ஜோடி, மீண்டும் குடும்பத்தினரிடம் இருந்து விடுதலை பெற்று சிறகடித்து பறந்தது.

இம்முறை சுரேஷின் கணவர் தனது மனைவியை கண்டறிந்து தரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் கள்ளக்காதல் ஜோடியை மீண்டும் கண்டறிந்து பிரித்து அவரவர் குடும்பத்துடன் அனுப்பி வைத்துள்ளது. சுகன்யாவும் தனது கணவரின் பேச்சை மதித்து ராஜ்குமாரோடு பேசாமல் இருந்துள்ளார். Chennai Shocker: கொசுவர்த்தி ஏற்றிவைத்து போதையில் உறக்கம்; வீடே தீப்பிடித்து காவலாளி உடல் கருகி பலி.! 

Love | Girl Sad (Photo Credit: Pixabay)

கள்ளகாதலியிடம் பேசாமல் இருப்பது ராஜ்குமாருக்கு தவிப்பை ஏற்படுத்தினாலும், திரைமறைவில் மன்மதன் போல வலம்வந்த அவர், தனது அண்ணி ஆனந்தியுடன் இருந்த நெருக்கத்தை அதிகப்படுத்தி இருக்கிறார். ஒருகட்டத்தில் அண்ணியுடன் தனது கணவர் ராஜ்குமார் தனிமையில் இருப்பதை ப்ரவீனா பார்த்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ப்ரவீனா தனது கணவரை செருப்பால் அடித்து நொறுக்கி இருக்கிறார். அண்ணி ஆனந்திக்கும் விளக்கமார் பிய்ய பிய்ய ப்ரவீனா அடித்து நொறுக்கி ஆத்திரத்தை தீர்த்துள்ளார். இதனை அவனமானாக எண்ணிய ஆனந்தி - ராஜ்குமார் கள்ளக்காதல் ஜோடி, ப்ரவீனாவை கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளது.

ராஜ்குமாரின் மீது சந்தேகம் வராமல் இருக்க, அவருக்கும் சில வெட்டுக்காயம் உடலில் வாங்கி, இறுதியில் அனைத்தும் பொய்த்துப்போய் காவல் துறையினரின் விசாரணையில் கள்ளக்காதல் ஜோடியின் கொடூரம் அம்பலமாகியுள்ளது. கைதான நபர்களை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement