Scam on PM House Scheme: ஒரே பெயரில் 4 பிரதமர் வீடுகள்; பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் மோசடி.. இலஞ்ச ஒழிப்புத்துறை வீடுவீடாக ஆய்வு.!
ஒரேயொரு பயனாளியின் பெயரை பயன்படுத்தி, 3 முதல் 4 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்து இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
செப்டம்பர் 02, கீழ்வேளூர் (Nagapattinam News): நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், ஆதமங்கலம் உட்பட பல ஊராட்சிகளில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. கீழ்வேளூர், ஆதமங்கலத்திற்கு உட்பட்ட 6 ஊராட்சிகளில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், ஊராட்சிமன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் இல்லாத காலத்தில், தனி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் மேற்பார்வையில் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 5-Year-Old Boy Killed: பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்த 5 வயது சிறுவன் கொலை; அரசு அதிகாரி கைது.. காஞ்சிபுரத்தில் பகீர்.!
வீடு-வீடாக சென்று நடந்த விசாரணை:
அந்தவகையில், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில், பயனர்களின் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, வீடு கட்டப்பட்டது என பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒரே குடும்பத்தை சேர்ந்த வெவ்வேறு பெயர்களில் குறைந்தது 2 வீடு முதல் 4 வீடுகள் கட்டப்பட்டது என பணம் சுருட்டப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த விவகாரத்தில் 49 வீடுகளில் இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. சொந்தமாக வேறொரு பயனர் கட்டிய வீட்டையும், பிரதமரின் வீடு என கணக்கு காண்பித்தது மட்டுமல்லாமல், மொத்தமாக 4 முறை வீடுகளை கட்டியதாக பணத்தை சுருட்டி இருக்கின்றனர்.
இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு வீடுகளாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)