Shocking News: சென்னை மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.. 2 நாட்களுக்கு குடிநீர் வராது..!
சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் வராது என சென்னை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜனவரி 18, சென்னை (Chennai): சென்னை மாதவரம் மண்டலம் பகுதியில் உள்ள, ரெட்டேரி சந்திப்பு அருகில் 200 அடி சாலையில் அமைந்துள்ள, சேவை சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் (CMRL) நாளை (ஜனவரி 19) காலை 9 மணி முதல் ஜனவரி 20-ம் தேதி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளன. எனவே, திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. Dating App Safety Tips: ஆன்லைனில் டேட்டிங் ஆப் யூஸ் பண்றிங்களா? இதோ உங்களுக்கான எச்சரிக்கை..!
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்துவைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். சென்னை குடிநீர் வாரியம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)
