Robbery Attempt In Tirunelveli: காதலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; 3 பேர் கொண்ட கும்பல் கைது..!

திருநெல்வேலியில் கோவிலுக்கு சென்ற காதலர்களிடம் நகை, பணம் போன்றவற்றை பறித்து சென்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Arrest (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 25, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காதலர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது, அவர்கள் கோவில் அருகே உள்ள மரத்தடியில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த 3 பேர், காதலர்களிடம் கத்தியை (Knife) காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன் போன்றவற்றை பறித்துச் சென்றுள்ளனர். Heatwave Death: சுட்டெரிக்கும் வெயிலால் 6 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை தகவல்..!

இச்சம்பவம் குறித்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வள்ளியூரை சேர்ந்த கண்ணன், கலையரசன் மற்றும் குட்டி ஆகிய 3 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதில், கலையரசன் என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now