Avalanche on Nepal Mountain: பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி.. 4 பேர் மாயம்..!
நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 03, காத்மாண்டு (World News): வடகிழக்கு நேபாளத்தின் யாலுங் ரி சிகரத்தில் இன்று (நவம்பர் 03) ஏற்பட்ட பனிச்சரிவில் (Avalanche) சிக்கி வெளிநாட்டு மலையேறுபவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 5,630 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தின் அடிப்படை முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் இருந்து மேலும் 4 பேர் காணாமல் போனதாக காத்மாண்டு செய்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குழந்தைகள் கண்முன் தாயை கொன்று ரத்தத்தை துடைக்கச் சொன்ன தந்தை.. உயிர் போகும் வரை நடந்த கொடூரம்.!
7 பேர் பலி:
யாலுங் ரி சிகரம் பாக்மதி மாகாணத்தின் டோலாகா மாவட்டத்தின் ரோல்வாலிங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இறந்தவர்களில் 3 பேர் அமெரிக்க குடிமக்கள், கனடாவை சேர்ந்த ஒருவர், இத்தாலியன் ஒருவர் மற்றும் 2 நேபாள நாட்டவர்கள் அடங்குவர் என்று மாவட்ட காவல் அலுவலக துணைக் காவல் கண்காணிப்பாளர் ஞான் குமார் மஹதோ தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)