Nepal Buddha Boy Arrested: சாமியாராக மக்களை நம்பவைத்து சிறுமியிடம் அத்துமீறல்: 4 பேர் மாயம்.. நேபாளத்தின் புத்த பையன் அதிரடி கைது.. யார் இவர்?..!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை சாமியாராக நம்ப வைத்து பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் கைது செய்யப்பட்டார்.

Buddha Boy in Temple (Photo Credit: @NepalDrishtikon X)

ஜனவரி 13, காத்மாண்டு (World News): கடந்த 1989ல் பால்டன் டோர்ஜே என்ற பெயருடன் பிறந்து, 2005ல் மரத்தடியில் தெய்வீக சக்தி தன்னை தியானம் செய்ய சொல்லியதாக கூறிய நபர், பின்னாளில் புத்த பையன் (Buddha Boy), ராம் பகதூர் போம்ஜோன் (Ram Bahadur Bomjan) என்று பிரதானமாக அறியப்பட்டார். இவர் பல மாதங்கள் வரை சாப்பிடாமல் இருந்து தியானம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

புத்தரின் மறுபிறவியாக மக்கள் பேச்சு: மக்கள் உள்ளூரில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மக்களை கவர, பலரும் நேரில் வந்து அவரை பார்க்க தொடங்கினர். இதனால் நேபாள அளவில் இளைஞர் பிரபலமாக, அவரை புத்தரின் மறுபிறவியாக அறிவித்து புத்த பையன் என்ற பெயரையும் சூட்டி இருந்தனர். இதனிடையே, கடந்த 2010ம் ஆண்டு புத்த பையன், தன்னிடம் சிஷ்யையாக இருக்க வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. IND Vs ENG Test Series: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஷமி இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம்.! 

Buddha Boy Ram Bahadur Bomjan Arrested (Photo Credit: @nepalipaisa X)

சிறுமி பலாத்காரம், 4 பேர் மாயம்: இதனையடுத்து, அவருக்கு எதிரான கருத்துக்கள் அதிகரிக்க, அவரின் சிஷ்யர்கள் 4 பேர் நிலைமை இன்று வரை தெரியவில்லை. இதனால் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நபரை நேபாள உளவுத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். இவரிடம் விசாரணை நடந்த பின்னரே பல உண்மைகள் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல, இவர் கைது செய்யப்படும்போது 17 நாடுகளின் 33 மில்லியன் மதிப்பிலான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

நித்தியானந்தா போல புத்த பையன்: திருவண்ணாமலையில் சாமியாராக வாழத்தொடங்கி, பின்னாளில் அதிகளவில் கவனிக்கப்பட்டு பிரபல நடிகையை சிஷ்யையாக பெற்று, இன்று தனக்குத்தானே தனிநாடு உருவாக்கிய ஆட்சி புரிந்து வருவதாக கூறும் நித்தியானந்தா மீதும் பாலியல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது. அவரை உலகெங்கும் கண்டவுன் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டும் பலனில்லை. நித்யானந்தா போல, நேபாளத்தின் புத்த பையன் கடவுளின் பெயரை சொல்லி சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறார். கடவுள் தன்னைத்தானே எங்கும் பிரநிதித்துவப்படுத்தாத நிலையில், அவரின் பெயரைச்சொல்லி பிழைக்கும் கூட்டம் தனக்கு தெரிந்து வகையில் கல்லா கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறது.