உடலில் தற்கொலை குறிப்பு எழுதி பெண் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

உத்தர பிரதேசத்தில் தனது உடல் பாகங்களில் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP Woman Suicide Case (Photo Credit: @TrueStoryUP X)

ஜூலை 18, பாக்பத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பாக்பத்தில் (Baghpat) கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மணீஷா சிங் என்ற திருமணமான பெண், தனது உடல் பாகங்களில் தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பாக்பத்த்தில் உள்ள சாப்ரௌலியின் ரத்தோடா கிராமத்தில் மனீஷா சிங் என்ற பெண், கடந்த 2023ஆம் ஆண்டு நொய்டாவைச் சேர்ந்த குந்தனை மணந்தார். ஒரு வருடம் முன்பு மஹிந்திராவின் தார் கார் வரதட்சணையாக வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால், மனீஷாவை தாக்கி சித்ரவதை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதில், மன வேதனையடைந்த அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றார். மருத்துவமனையில் கைதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்..!

பெண் தற்கொலை:

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கணவர் குந்தன் அவளை அழைத்துச் செல்ல வந்துள்ளார். ஆனால், மனீஷா அவருடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குந்தன் விவாகரத்து பற்றிப் பேசினார். அதன் பிறகு, மன அழுத்தத்தில் இருந்த மனீஷா தனது உடல் பாகங்களில் தற்கொலை குறிப்பு எழுதிவைத்து விட்டு, விஷம் குடித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டார்.

போலீஸ் விசாரணை:

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement