Boat Capsize Accident: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்பு - 4 பேர் பலி..!
ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்கப்பட்டு, அதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

ஏப்ரல் 16, ஸ்ரீநகர் (Jammu And Kashmir News): ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஜீலம் ஆற்றில் (Jhelum River) இன்று அதிகாலை பல பயணிகளுடன் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதுகுறித்து, பட்வாரா கந்தபால் பகுதியை சேர்ந்த உள்ளூர் வாசிகள் உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். Teenager Murder Attempt: 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே..! – பெற்றோருக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி..!
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழு, மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதில், 7 பேர் மீட்கப்பட்டு உடனடியாக ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இதில், 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும், 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில், ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப்படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)