Car-Bus Accident: கார்-பேருந்து நேருக்கு நேர் மோதல்; 7 பேர் பலி.. 25 பேர் படுகாயம்..!

உத்தர பிரதேசத்தில் கார்-பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 05, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், எடாவா (Etawah) மாவட்டத்தில் உஸ்ராஹர் பகுதியில் உள்ள ரேபரேலியில் இருந்து டெல்லி (Rae Bareli To Delhi) நோக்கி சென்றுக் கொண்டிருந்த பேருந்து, லக்னோவில் இருந்து ஆக்ரா நோக்கி குடும்பத்துடன் பயணித்த கார் மீது மோதியது. இதில், சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து (Car-Bus Collision) விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்றைய (ஆகஸ்ட் 04) தினம் நிகழ்ந்துள்ளது.  Stone Pelting on Moving Train: விரைவு இரயில் மீது கல்வீசி தாக்குதல்; பயணி காயம்.. பீகாரில் பகீர் சம்பவம்.!

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 60 பேர் பயணம் செய்துள்ளனர். கார் ஓட்டுநர் வழியில் உறங்கியது தான் விபத்திற்கு காரணமாக உள்ளது. மேலும், எதிரே வந்த பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை ஓட்டி வந்ததாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement