SC Chief Justice Oath: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக பதவியேற்பு.. யார் அந்த சஞ்சீவ் கண்ணா?!
நீதிபதி சஞ்சீவ் கண்ணா இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
நவம்பர் 11, புதுடெல்லி (New Delhi): உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று (Justice ) பதவியேற்றார். இவரது பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி வரை இருக்கிறது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்ற நிலையில் நேற்று (நவம்பர் 10-ம் தேதி) ஓய்வு பெற்றார். Woman Murdered For Silver Anklets: கொடூரமான முறையில் நடந்த கொலை.. கொலுசுக்காக வெட்டப்படும் கால்கள்.. பின்னணி என்ன?!
சஞ்சீவ் கண்ணா: சஞ்சீவ் கண்ணா டெல்லியில் 1960 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை தேவ்ராஜ் கண்ணா டெல்லி உயர் நீதிமன்றத்தில் 1985 ஆம் ஆண்டு நீதிபதியாக இருந்தவர். சஞ்சீவ் கண்ணா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். 2016-ம்ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2019-ம்ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இவர் அரசியல் கட்சிகள் தேர்தல்பத்திரம் மூலம் நிதி பெற்றது தொடர்பாக வழக்கு; சட்டப்பிரிவு 370 உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)