PM Condoles Urdu Poet Munawwar Rana: கவிஞர் முனவ்வர் ராணா மறைவு.. பிரதமர் மோடி இரங்கல்..!

புகழ்பெற்ற உருது கவிஞர், முனவ்வர் ராணா மறைவிற்கு தற்போது பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

PM Modi & Munawwar Rana (Photo Credit: Facebook & @Ferozahmed499 X)

ஜனவரி 15, புதுடெல்லி (New Delhi): பிரபல உருது கவிஞர் முனவ்வர் ராணா (Munawwar Rana) (வயது 71), நீண்ட காலமாக புற்றுநோய் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக லக்னாவில் உள்ள எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜனவரி 14ம் தேதி அவர் காலமானார். இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். IND vs AFG 2nd T20I: சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷிவம் துபே.. தொடரை வென்ற இந்தியா..!

பிரதமர் மோடி இரங்கல்: தற்போது இந்த மாபெரும் கவிஞரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) எக்ஸ் தளம் வழியாக இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முனவ்வர் ராணா ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் உருது இலக்கியம் மற்றும் கவிதைக்காக சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now