Bharat Ratna 2024: தமிழ்நாட்டுக்கே கெளரவம்.. பசுமைப்புரட்சியின் தந்தை, முன்னாள் பிரதமர்களுக்கு பாரத ரத்னா விருது.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!

இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது அறிவித்துள்ளார்.

P. V. Narasimha Rao| M. S. Swaminathan| Charan Singh (Wikipedia)

பிப்ரவரி 09, புதுடெல்லி (New Delhi): முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா (Bharat Ratna) விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

அதன்படி முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் (P. V. Narasimha Rao) குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "நமது முன்னாள் பிரதமர் திரு.பி.வி.நரசிம்ம ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், நரசிம்ம ராவ் பல்வேறு பதவிகளில் இந்தியாவுக்குப் பணிபுரிந்தார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், பல ஆண்டுகளாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதது. அவரது தொலைநோக்கு தலைமையில் இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறி, நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள், ஒரு தலைவராக அவரது பன்முக மரபை எடுத்து காட்டுகிறது." என்று குறிப்பிட்டுளார். Chocolate Day 2024: காதலர் தின வாரத்தின் சாக்லேட் தினம்.. எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?.!

மேலும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (M. S. Swaminathan) குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஜி அவர்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் மற்றும் இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும் மற்றும் பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அவரது விலைமதிப்பற்ற பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம். டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழுமையையும் உறுதி செய்துள்ளது. அவர் எனக்கு நெருக்கமாகத் தெரிந்த ஒருவர், அவருடைய நுண்ணறிவு மற்றும் உள்ளீடுகளை நான் எப்போதும் மதிப்பேன்." என்று குறிப்பிட்டுளார்.

அதுமட்டுமின்றி முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் (Charan Singh) குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,“நாட்டின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர். உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவர் எப்போதும் உத்வேகம் அளித்தார். எமர்ஜென்சிக்கு எதிராகவும் உறுதியாக நின்றார். நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பும், நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது" என்று குறிப்பிட்டுளார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement