Cylinder Burst Accident: சமையல் எரிவாயு வெடித்துச் சிதறல்; தாய், 3 குழந்தைகள் பரிதாபமாக பலி..! அதிகாலையில் நேர்ந்த சோகம்..!
அதிகாலையில் வீட்டின் சமையல் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் லக்னோவில் நடந்துள்ளது.
மார்ச் 30, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரிய மாவட்டத்தில் உள்ள தும்ரி கிராமத்தில் சிவசங்கர் குப்தா மற்றும் இவரது மனைவி, 3 குழந்தைகள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிவசங்கர் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியில் புறப்படுவதற்காக தயாராகி கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி வீட்டிற்குள் தேநீர் தயாரித்துள்ளார். Chettinad Sambar Recipe: சுவையான செட்டிநாடு சாம்பார் சமைப்பது எப்படி?
திடீரென எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த சமையல் எரிவாயு (Cylinder Explosion In House) பயங்கரமான சத்தத்துடன் வெடித்தது. இதில், சிவசங்கரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என நான்கு பெரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிவசங்கர் உயிர்தப்பியுள்ளார். இந்த சத்தம் கேட்டு உடனடியாக வந்த அக்கம்பக்கத்தினர், தாய் மற்றும் குழந்தைகள் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த 4 உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமையல் எரிவாயு வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)