Eye Brow: கர்ப்பப்பையை பலவீனப்படுத்தும் ஐ-ப்ரோ அழகு சிகிச்சை; மருத்துவர் கூறிய பரபரப்பு தகவல்.! பெண்களே உஷார்.!

16 வயதை குறைந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் கண் புருவ அழகு சிகிச்சை என்பது கட்டாயம் கர்ப்பப்பையின் வலுவிழப்புக்கு வழிவகை செய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதுசார்ந்த மருத்துவரின் அறிவுரையை தெரிந்துகொள்ள தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

Eye Brow / Fetus (Photo Credit: Pixabay)

மே 15, சென்னை (Chennai): தங்களின் இயற்கையான அழகுடன் கூடுதல் எழிலை தரும் மேக்கப், இன்றளவில் ஒவ்வொரு தனிநபர்களாலும் விரும்பப்படுகிறது. பல இடங்களில் இவை முதல் காட்சி தோற்றத்தின் அடையளமாகவும் கவனிக்கப்படுகிறது. ஒருகாலத்தில் செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் மட்டும் பயன்படுத்தி வந்த மேக்கப் பொருட்கள், இன்றளவில் நடுத்தர வீடுகளிலும் கட்டாயம் என்ற இடத்தை பெற்றுவிட்டது. இந்த வளர்ச்சி சரியானது எனினும், அதனை முறையற்று பயன்படுத்தும் நபர்கள் தங்களின் எதிர்காலத்தில் பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கின்றனர். Love Boy Killed by Girl: வேறொரு பெண்ணுடன் பேசிய காதலன்; பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கல்லூரி மாணவி.. தமிழகமே அதிர்ச்சி.! 

கர்ப்பப்பை ஆரோக்கியத்துடன் தொடர்புடைய ஐ-ப்ரோ: இந்நிலையில், கர்ப்பப்பைக்கும் (Fetus) - அழகு சிகிச்சைக்கும் உள்ள தொடர்பு குறித்து வாழ்வியல் மருத்துவர் நிவேதனா அதிர்ச்சிதரும் தகவலை தெரிவித்தார். அந்த தகவலில், "அழகு சிகிச்சையை கவனிக்கும்போது, புருவ (Eye Brow Treatment) சீர்திருத்தம் என்பது பெண்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றதாக மாறி இருக்கிறது. இந்த முறையை பெண்ணின் கர்ப்பப்பை (Karpappai) முழுவதும் வளர்ந்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இன்றளவில் சிறிய குழந்தைகளுக்கு கூட புருவ சீர்திருத்தத்தை செய்கிறார்கள். அவற்றை அத்தியாவசியம் எனவும் எண்ணுகின்றனர். கர்ப்பப்பை தனது முழு வளர்ச்சியை எட்டாமல் புருவ சீர்திருத்தம் மேற்கொண்டால், அதனால் கர்ப்பப்பை பலவீனம் அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. Bus - Lorry Collision Fire Accident: தனியார் பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து.. பேருந்து தீப்பிடித்து 5 பயணிகள் உடல் கருகி பலி..! 

16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் கூடாது: கர்ப்பகாலத்தில் புருவ சீர்திருத்தம், வேக்சிங் போன்றவற்றை செய்வது பிரச்சனையை உண்டாகும். இவற்றை நாம் மேற்கொள்ளும்போது, கர்ப்பப்பை பலவீனமாக 100% வாய்ப்புகள் உள்ளது. குறைந்தபட்சம் 16 வயதுக்கு பின்னர் தான் கண்களில் புருவ சீர்திருத்தம், வேக்சிங் போன்றவை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தில் பெண் தனது கர்ப்பத்தின் தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை, கர்ப்பப்பை நலனுக்காக புருவ சீர்திருத்தத்தை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. Trending Video: கார் கூரையில் அமர்ந்து சரக்கடித்த இளைஞர்கள்; காவல்துறை கவனிப்புக்கு பின் மன்னிப்பு கேட்டு கதறல்.!

கர்ப்பப்பை இறங்கும் வாய்ப்பு அதிகம்: இதனால் கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். புருவ சீர்திருத்தம் மேற்கொள்வது சில நேரம் கர்ப்பப்பையை பலவீனமடைய செய்து, அதன் இறக்கத்திற்கும் வழிவகை செய்யும். அழகு என்பது இன்றளவில் அடிமை ஆகிவிட்டது. அனைத்து பெண்களும் அழகு சாதன பொருட்களை கைப்பையில் கொண்டு செல்கின்றனர். தனிமனிதரின் நாகரீகம் மேக்கப் என்று தவறாக அடையாளப்படுத்தட்டு, அதனை பின்பற்றுவதால் பல பிரச்சனைகள் நிகழுகின்றன" என தெரிவித்தார்.

வீடியோ நன்றி: பாலிமர்

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement