Cancer Treatment: நல்லா தூங்குனாலே போதுமா?.. புற்றுநோயை விரட்டி அடிக்க..!

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வது தான் நடைமுறை.

Sleeping (Photo Credit: PIxabay)

ஏப்ரல் 22, புதுடெல்லி (New Delhi): இந்த நூற்றாண்டில் கடுமையாகப் பரவி வரும் மிகக் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோய் உலகின் மிக ஆபத்தான கொலைகார நோயாக மாறிவிட்டது. மேலும் முதல் முறை புற்றுநோய் (Cancer) பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு 2வது முறை கேன்சர் வர பல வாய்ப்புகள் உள்ளது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரம் குறைவாக தூங்குகிறோம். இந்த போதுமான தூக்கமில்லாமல் இருப்பதன் காரணமாக இதயநோய், நீரிழிவு நோய், உடல் பருமன், தொற்றுநோய்கள் மட்டுமல்ல புற்றுநோய்கூட ஏற்படலாம். கல் நேர தூக்கத்தை தவிர்த்து நாளொன்றுக்கு இரவு தூக்கம் 6 மணி நேரத்திற்கும் குறைவாக கொண்ட நபர்கள், குறிப்பாக 7 மணி நேரத்திற்கும் குறைவாக தொடர்ந்து தூங்கி வரும் நபர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. SC Allows 14-Year-Old Rape Survivor To Abort: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு கருக்கலைப்பு.. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!

மெலடோனின்: இந்த புற்றுநோயைக் கட்டுப்படுத்த தூக்கம் என்பது முக்கிய காரணி ஆகும். மெலடோனின் என்பது பினியல் சுரப்பி மூலம் மூளைக்கு வெளியிடப்படும் ஹார்மோன் ஆகும். அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்க, மக்கள் அதை இயற்கையான அல்லது செயற்கையான துணைப் பொருளாகவும் எடுத்துக் கொள்ளலாம். உடலில், மெலடோனின் பல செயல்பாடுகளைச் செய்கிறது, ஆனால் இது முக்கியமாக சர்க்காடியன் தாளங்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்கது. சர்க்காடியன் ரிதம் என்பது உடலின் உள் கடிகாரம். எப்போது தூங்க வேண்டும், எப்போது எழுந்திருக்க வேண்டும் என்பதை இது உடலுக்கு அறிவுறுத்துகிறது. இது புற்றுநோய் எதிர்ப்பு ஹார்மோன் கூட ஆகும்.

இதனிடையே மற்றொரு ஆய்வு ஒன்று இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் (59%) நள்ளிரவு 12 மணிக்கு பிறகு தான் தூங்குகிறார்கள். இது கவலைக்குரிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இரவு உறங்க செல்ல உகந்த நேரம் இரவு 10 - 11 மணி வரை என நிபுணர்கள் கருதுகிறார்கள். இரவு நேரத்துடன் தூங்கி காலை சூரிய உதயத்தின் போது சீக்கிரமே எழுவது உடலின் இயற்கையான சர்க்காடியன் ரிதமை சீராக்க வைக்க உதவி, ஆரோக்கியமான தூக்கம், விழிப்பு சுழற்சியை உறுதி செய்கிறது. இது புற்றுநோயிலிருந்து மட்டுமல்ல, உடலை மற்ற பிணியிலிருந்தும் காக்கக்கூடியது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement