Parking Dispute 4 Death: பார்க்கிங் தகராறில் படுபயங்கரம்: 4 பேர் கொடூரமாக கொலை.. திரைப்படத்தை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்.!

வெளிமாநிலத்தில் இருந்து பீகார் வந்த இளைஞர்கள் குழு, பார்க்கிங் பிரச்சனையில் ஒருவரை கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காரில் வந்த நபர்களில் 3 பேரை அடித்துக்கொலை செய்தனர்.

Bihar Parking Dispute (Photo Credit: @piovijay X)

ஜனவரி 16, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் (Aurangabad) மாவட்டம், நபிநகர் பகுதியில் நேற்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 4 பேர் காரில் வந்து இருக்கின்றனர். அங்கிருந்த கடை ஒன்றின் முன்பு வாகனத்தை நிறுத்தி இருக்கின்றனர். அப்போது, கடையின் உரிமையாளர் காரை அங்கு நிறுத்த கூடாது என சொல்லியுள்ளார்.

அப்பாவி சுட்டுக்கொலை: இதனால் காரில் வந்த கும்பல் வாக்குவாதம் செய்ய, ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கும்பல் 65 வயதுடைய ராம்சரண் சௌகான் என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், காரை சுற்றிவளைத்து தாக்கினார்.

கிராமத்தினர் ஆத்திரம்: மேலும், காருக்குள் இருந்த நபர்களை பிடித்து கிராமமே அடித்து நொறுக்கியது. இந்த சம்பவத்தில் காருக்குள் இருந்த 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயத்துடன் மருத்துவமனையில் இருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். Car Collision: இரண்டு கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி., 4 பேர் காயம்.! நள்ளிரவில் நடந்த சோகம்.! 

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

காவல்துறை விசாரணை: இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அவுரங்காபாத் காவல் துறையினர், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருதரப்பு மோதல் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை.

பார்க்கிங் திரைப்படத்தைப்போல சம்பவம்: சமீபத்தில் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம், வீட்டில் மேல்-கீழ் தளங்களில் வசித்து வரும் குடும்பத்தின் வாகன நிறுத்துமிட தகராறை மையப்படுத்தி வெளியானது. படத்தில் இறுதி சுபமாக முடிந்தாலும், நிஜத்தில் அது நடக்கவில்லை. பீகாரில் தற்போது நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம் பதறவைத்துள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement